TNPTF - ன் மாநில சிறப்பு பொதுக் குழுக்  கூட்டத் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 10, 2015

TNPTF - ன் மாநில சிறப்பு பொதுக் குழுக்  கூட்டத் தகவல்

🌟TNPTF - ன் மாநில சிறப்பு பொதுக் குழுக்  கூட்டத் தகவல்🌟

👉இன்று 09.08. 2015 ஞாயிற்றுக்கிழமை கூடுவாஞ்சேரி GRK திருமண மண்டபத்தில் நடந்த, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
TNPTF-ன் மாநில சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.  

👉சுமார் 750 பேர் கலந்து கொண்டனர்.

👉புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி 02.09.2015 அன்று இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரு நாள் வேலை நிறுத்தம் (Strike) செய்ய இருக்கின்றன.

👉அஞ்சல் துறை மற்றும்  பொதுத் துறைகளும்  கலந்துகொள்கின்றன.

👉வங்கிகளும் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

👉 நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.

👉 நாடு முழுவதும் அனைத்து  மாநிலங்களிலும் STFl-ல் அங்கம்  வகிக்கும்  அனைத்து  ஆசிரியர் சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன.

👉தமிழ்நாட்டில் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்  சங்கங்கள் STFI -ல் அங்கம் வகிக்கின்றன. அவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

👉நம்முடைய TNPTF - ம்
STFI-ல் அங்கம் வகிக்கிறது.
,
👉எனவே தமிழகம் முழுவதும்
TNPTF - ன் 35,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

👉போராட்டத்திற்கு தயாராக
இருங்கள்

👉நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள் பற்றி வட்டார செயற்குழுவில் விளக்கப்படும்..

(குறிப்பு :  STFI - School Teachers Federation of India - இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு )

நன்றி: திரு.ரஞ்சன் தயாள தாஸ்.

No comments:

Post a Comment