TNTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற நிர்ப்பந்திக்க கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 2, 2017

TNTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற நிர்ப்பந்திக்க கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு.

TNTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற நிர்ப்பந்திக்க கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஏற்கனவே பணி ஆசிரியர்களை ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற நிர்ப்பந்திக்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை ஒரே வாய்ப்பில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக அரசு நிர்ப்பந்திக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் ஆர்.சத்தியமூர்த்தி, ஏ.ரமேஷ், வெங் கடடேஷ்வரன், புவனேஸ்வரி, மணிமாலா, பத்மா உள்ளிட்ட பலர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கடந்த 23.8.10 முதல் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வைக் கொண்டு வந்தது. இதன்படி தமிழக அரசு கடந்த 15.11.11 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழகத்தில் அமல் படுத்த உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்தில் இதற்கான அரசு உத்தரவு முறைப்படி 28.3.12-ல் பிறப்பிக்கப்பட்டு தமிழகத் தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப் பட்டது.

ஆனால் இந்த அறிவிப்பாணை வெளிவரும் முன்பாகவே பணி யில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சி லின் விதிமுறைகள் மற்றும் அறிவிப்பாணைப்படி, தமிழகத்தில் கடந்த 2012 முதல் தற்போது வரை ஆண்டுக்கு 2 முறை என மொத்தம் 10 ஆசிரியர் தகுதித் தேர்வுகளை தமிழக அரசு நடத்தியிருக்க வேண்டும்.ஆனால், தமிழகத்தில் கடந்த 2012 ஜூலை, 2012 அக்டோ பர் (துணைத் தேர்வு), 2013 ஜூலை யில் மட்டுமே இத்தேர்வு நடத்தப் பட்டுள்ளது. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற் போது 2017 ஏப்ரலில் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட வேண் டிய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படவில்லை.ஆனால், ஏற்கெனவே பணியில் உள்ள நாங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற இதுதான் கடைசி வாய்ப்பு என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இத்தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல 2012-க்கு முன்பாக பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் விதிவிலக்கு அளிக்க வேண்டும்.மேலும் தற்போது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், நாடு முழுவதும் உள்ள 11 லட்சம் ஆசிரியர்களின் நலன் கருதி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் காலக்கெடுவைவரும் 31.3.2019 வரை நீட்டித்துள்ளது. எனவே, ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்தாண்டு நடந்த தேர்வுதான் கடைசி வாய்ப்பு எனவும், தேர்ச்சி பெறாதவர்கள் பணிநீக்கம் செய் யப்படுவர் எனவும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.அதுபோல இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை நாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.

பதிலளிக்க வேண்டும்

இந்த மனுக்கள் மீதான விசா ரணை நீதிபதி டி.ராஜா முன்பு நடந்தது. மனுதாரர்களின் வழக்கறி ஞர்கள் ஜி.சங்கரன், கோவிந்தன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரக அதிகாரிகள் பதி லளிக்க உத்தரவிட்டு, விசார ணையை வரும் ஜூன் மூன்றாவது வாரத்துக்கு தள்ளி வைத்தார். அதுவரை மனுதாரர்களை இந் தாண்டே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிர்ப்பந்திக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment