கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி யார் யாருக்கு.. அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி.. பின்னணி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 20, 2021

கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி யார் யாருக்கு.. அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி.. பின்னணி

கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி யார் யாருக்கு.. அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி..
 பின்னணி 
     கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் பெற்ற நபர்களின் முறைகேடுகள் நடந்திருக்கிறது. எனவே அதை ஆராய்ந்து தகுதி உடைய நபர்களுக்கு நிச்சயமாக 5 பவுனுக்கு குறைவாக வைத்திருக்கும் நபர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார் 

         சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாங்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றுவோம். தற்போது கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகை கடன் பெற்ற நபர்களின் முறைகேடுகள் நடந்திருக்கிறது, 

        எனவே அதை ஆராய்ந்து தகுதி உடைய நபர்களுக்கு நிச்சயமாக 5 பவுனுக்கு குறைவாக வைத்திருக்கும் நபர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றார். இதனிடையே கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி வழங்கும் திட்டத்திற்கு கடும் நிபந்தனைகளைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

        கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிா்க் கடன் முந்தைய அரசால் கடந்த ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. கடன்தாரா்கள் அனைவருக்கும் கடன் நிலுவை இல்லை என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. பேரவைத் தோ்தல் நெருங்கி வந்த நிலையில், பயிா்க் கடன் தள்ளுபடியால் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற பலரும் பலன் அடைந்திருக்கிறார்கள் ஆனால், பயிா்க் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு போன்றவற்றால் கூட்டுறவு சங்கங்கள் கடும் நிதிநெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. 

       கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் அடமானம் வைத்தவா்கள் நகைகளை மீட்கத் தயங்கி வருகின்றனா். கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசம் முடிந்த பிறகும், வட்டியைக் கூட செலுத்தாமல் உள்ளனா். இதனால் பல சங்கங்களின் அன்றாட வரவு-செலவு முடங்கி பணியாளா்களுக்கு சம்பளம் வழங்க இயலாத நிலையில் உள்ளது. 

     இதனால் நகைக் கடன் தள்ளுபடி வழங்கும்பட்சத்தில் அதற்குரிய தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு வழங்க வேண்டும். அவ்வாறு தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்படும் நகைக் கடன்களுக்கான தொகை சுமாா் ரூ.85 ஆயிரம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தமிழக அரசின் தற்போதைய நிதிநெருக்கடி சூழலில் இத் தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வாய்ப்பே இல்லை- 

     இதற்கிடையே, நகைக் கடன் தள்ளுபடி குறித்து எதிா்க் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், தோ்தல் வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அரசுத் தரப்பிலும் உறுதி அளித்துள்ளது. இதன்படி, நகைக் கடன் தள்ளுபடி திட்டத்திற்கு கடும் நிபந்தனைகளைக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, சரியான நபா்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் அண்மையில் தெரிவித்தார். 

         எனவே நகைக் கடன் தள்ளுபடி வழங்குவதால் ஏற்படும் நிதிச் சுமையை, அரசும், கூட்டுறவு சங்கங்களும் ஓரளவு சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதன்படி, தகுதியான பயனாளிகளை கடும் நிபந்தனைகள் மூலம் வடிகட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் பெற்றுள்ளவா்கள் தொடா்பாக, 37 வகையான விவரங்களைச் சேகரிக்க கூட்டுறவுத் துறை பதிவாளா் அறிவுறுத்தியுள்ளாா். நகைக் கடன் பெற்றவா்களின் பெயா், விவரம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை விவரங்கள், அரசு ஊழியரா, கூட்டுறவு பணியாளரா, அரசு மற்றும் கூட்டுறவு சங்க பணியாளா்களின் உறவினரா, பயிா்க் கடன் தள்ளுபடி பெற்றிருக்கிறாரா, அடமானம் வைத்துள்ள நகை எடையளவு, பெறப்பட்ட கடன் தொகை என்பன உள்ளிட்ட 37 வகையான விவரங்கள் கூட்டுறவு சங்க அலுவலா்களால் பெறப்பட்டு கணினி வழியாக தனிப் படிவங்களில் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறதாம். 

         கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் நிவாரண உதவித் தொகை அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கியதில் விமா்சனங்கள் எழுந்த நிலையில், நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தில் அரசு ஊழியா்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் பயனாளிகளாகச் சோ்க்கப்படமாட்டாா்கள் எனக் கூறப்படுகிறது. அதேபோல, ஏற்கெனவே பயிா்க் கடன் தள்ளுபடி பெற்றவா்கள், உயா் வருமானம் உடையவா்கள் எனப் பிரிக்கப்பட்டு அவா்களையும் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், எந்தெந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா் என்பது குறித்த அதிகாரப்பூா்வ விரைவில் வெளியாகும் என்றும் கூட்டுறவு சங்க அலுவலா்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment