வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதி - பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 27, 2021

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதி - பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதி - பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 

செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகளுக்கு பள்ளி திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - நாள்: 26.08.2021. பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் : 

 *பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும் 

*வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படவுள்ளனர். 

*பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாள்களில் வகுப்புகள் செயல்படும். 

*பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம். 

*ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். 

*வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவர். 

*வகுப்பறைகளிலும் , பள்ளி வளாகத்திலும் மாணவர்கள்,ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். 


*மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் 

*அனைத்து ஆசிரியர்களும், பள்ளி அலுவலர்கள், ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம். 

*பள்ளிகள் திறக்கும் முன் பள்ளி வளாகத்தில் உள்ள மேஜை, இருக்கைகள், கதவுகள், ஜன்னல்கள் கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும். 

*அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை வைத்திருக்க வேண்டும். 

*பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.

No comments:

Post a Comment